(567)
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
பதவுரை
| ஆழி வெண்சங்கை |
– |
கம்பீரமாய் வெளுத்திராநின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே! |
| மருப்பு ஓசித்த மாதவன்தன் |
– |
(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ணபிரானுடைய |
| வாய் |
– |
திருஅதரத்தினுடைய |
| சுவையும் |
– |
ரஸத்தையும் |
| நாற்றமும் |
– |
பரிமளத்தையும் |
| விரும்புற்று |
– |
ஆசையோடே |
| கேட்கின்றேன் |
– |
(உன்னைக்) கேட்கிறேன். |
| திருபவளம் செம்வாய்தான் |
– |
(அப்பெருமானுடைய) அழகியபவளம் போன்ற சிவந்த திருவதரமானது |
| கருப்பூரம் |
– |
பச்சைக்கற்பூரம் போல் |
| நாறுமோ? |
– |
பரிமளிக்குமோ? (அல்லது) |
| கலம்பூ |
– |
தாமரைப்பூப்போலே |
| நாறுமோ? |
– |
பரிமளிக்குமோ? |
| தித்தித்திருக்குமோ |
– |
மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ? |
| சொல் |
– |
இன்னபடியிருக்குமென்று எனக்குச் சொல் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கம்பீரமான ஹ்ருதயத்தையும் பரமசுத்தஸ்வபாவத்தை யுமுடைய சங்கே! உன்னை ஆசையோடு ஒருவிஷயம் கேட்கிறேன், சொல்லவேணும்; உனக்குத் தெரியாத அம்ஸித்தைப்பற்றி நான் கேட்கப்போகிறதாக நினைக்கவேண்டா, கண்ணபிரானது திருவதரத்தில் ஊறுகின்ற அமுதத்தின் ரஸபரிமங்களைக் குறித்துக் கேட்கிறேனித்தனையல்லது வேறிலை; அவ்வமுதமானது பரிமளத்திலே பச்சைக் கருட்பூரத்தை ஒத்திருக்குமோ, அல்லது தாமரைப்பூவை ஒத்திருக்குமோ? ரஸத்தில் த்ருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக்கூடியவஸ்து யாதென்றும் எனக்கு ஸ்புரிக்கவில்லை; விலக்ஷணமான தித்திப்பை உடையதாயிருக்குமோ? எனக்குத் தெரியச் சொல்லவேணும் என்கிறாள்.
“கருப்பூரம் நாறுமோ“, “கமலப்பூநாறுமோ“ என்ற இரண்டிடத்திலும் உபமவுருபு தொக்கிக்கிடக்கிறது; கரும்பூரம்போல் நாறுமோ கமலப்பூப்போல் நாறுமோ என விரிக்க.
சுவையும் நாற்றமும் – வாயினுடைய பரிமளத்தையும் வாயமுதத்தினுடைய ரஸத்தையும் என்க. ஆழிவெண்சங்கே = ஆழி என்று கடலுக்கும் பேராதலால், கடலில் நின்று தோன்றிய வெண்சங்கே! என்றுரைத்தலுமாம். (“வெண்சங்கே!.) கைவிடாதே அநுபவியாநிற்கச் செய்தேயும் உடம்பு வெளுக்கும்படியிறே இவனுடைய ஆற்றாமை“ என்ற வியாக்யான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்மின், சங்குக்கு வெண்மை இயற்கைக்குணமன்றுபோலும்,
English Translation
Tell me, O White Conch, I am eager to know. Does the mouth of our killer-of-the-rutted-tusker Lord Madavan bear the aroma of camphor, or the fragrance of lotus? Are his auspicious lips sweet to taste?
