(555)
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ நாராய ணாயவென் பாரே
பதவுரை
| வேல் கண் |
– |
வேல்போன்ற கண்களையுடையளாய் |
| மடந்தை |
– |
பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய் |
| கண் உறு நால்மறையோர்புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை |
– |
ஸ்வாபர்தொநமான நான்குவேதங்களையும் ஒதின ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள், |
| அடி விண் உற நீண்டுதாவிய மைந்தனை |
– |
திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப்பொருந்தும் படியாக நெடுகவளர்ந்து (உலகங்களை) வியாபித்தமிடுக்கை யுடையனான எம்பெருமானை |
| விரும்பி |
– |
ஆசைப்பட்டு |
| கருங் குயிலே! என் கடல் வண்ணனை கண் உறகூவு என்ற மாற்றம் |
– |
‘ஓகரியகுயிலே! கடல்போன்ற திருநிறத்தையுடையனான என் காதலனை நான் ஸேவிக்கும்படி நீ கூவு என்று நியமித்த பாசுரமாக |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| நண்ணுறு வாசகம் மாலை |
– |
போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்திமாலையை |
| வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
| ‘நமோநாராயணாய்‘ என்பர் |
– |
எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப்பெறுவர்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழியை ஓதவல்லவர்கள் ஸ்வரூபமான புருஷார்த்தத்தை பெறுவர்களென்று பலஞ்சொல்லி முடிக்கிறது இப்பாட்டு.
“வேங்கடவனைவிரும்பி“ என்றாவது “சங்கொடுசக்கரத்தானை விரும்பி“ என்றாவது “பவளவாயனைவிரும்பி“ என்றாவது அருளிச்செய்யாமல் “விண்ணுற நீண்ட்டிதாவிய மைந்தனை விரும்பி“ என்றதற்குக்கருத்து – ஒருவரிடத்தில் ஒன்றைக்கொள்ளநினைத்தால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் மிகுந்திருக்கவொண்ணாதபடி ஸர்வாங்கசுத்தி பண்ணுகிறவனையாயிற்று நான்விரும்பியது! *இரக்க மண் நொடுத்தவற்கு இருக்க வொன்று மின்றியே பரக்கவைத்தளந்து கொண்ட பற்பபாதனை நான் விரும்புகையாலே ஸர்வத்தையுமிழந்து சந்தியில் நின்று சங்கடப்படவேண்டிற்று என்கை.
“வேற்கண்மடந்தை… பட்டர்பிரான்கோதை, விண்ணுற – நீண்டடிதாவிய மைந்தனைக்கண்ணுறவிரும்பி, ‘கருங்குயிலே! என்கடல்வண்ணனைக்கூவு‘ என்ற மாற்றஞசொன்ன நண்ணுறுவர்சக மாலைவல்லார் நமோநாராயணாய வென்பார்“ என்றும் அந்வயமாகலாம். “வேற்கண்மடந்தை கண்ணுறவிரும்பி“ என்றஸ்வாரஸ்யத்தால் – “அவன்றன்னை வேலுக்கு இரையாக்கத்தேடுகிறான்“ என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.
நண்ணுறு – நண்ணுவதற்கு உற்ற அனைவரும் ஆசைப்படத்தக்க – போக்யமானஎன்றபடி. ‘எம்பெருமானை நண்ணுவதற்கு உற்றவாசகமாலை‘ என்றும் பெருள்கொள்ளலாம். எம்பெருமானுடைய குணங்களைப் பேசப்புகுந்த வேதம் “***“ (யதோவாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸா ஸஹ) என்னும்படி கையொழிந்துபோனது போலல்லாமல் அவனுடைய குணம் முதலியவற்றை நன்றா நண்ணுவதற்கு (ப்ரதிபாதிப்பதற்று) உற்றவாசகமாலை என்று கருத்து.
நமோநாராயணாய வென்பாரே – “பல்லாண்டென்று பவித்திரனை நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டேத்துவர்“ என்று இவளுடைய திருதமப்பனார் அருளிச்செய்ததில் நோக்கு, பல்லாண்டுபாடப்பெறுவரென்கை திருமந்திரத்தின் பொருளிலே நிஷ்டையுடையராகப் பெறுவர் என்னவுமாம். திருவஷ்டாக்ஷரத்தை யநுஸந்திப்பவர்களுக்கு என்னபலனே அதுவே இப்பதிகம் கற்றார்க்கும்பலன் என்றவாறு. இம்மாலை வல்லாரும் நமோநாராயணாய வென்பாரும் துல்யர் என்க.
English Translation
These are songs of a beautiful dame desirous of seeing the Lord, addressing the dark Koel to go and call him, sung by Goda, daughter of learned Puduvai town’s King Pattarbiran. Those who master it will say “Namo Narayanaya”.
