(554)

(554)

அன்றுல கம்மளந் தானையுகந் தடிமைக்கண வன்வலி செய்ய

தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்

என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே

இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்

பதவுரை

அன்று

மஹாபலி கொழுத்திருந்த அக்காலத்  தில்
உலகம் அளந்தானை

மூவுலகங்களையும் அளந்துகொண்ட வனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து

நான் கைங்கர்யத்தை ஆசைப்பட,
அவன்

அவ்வெம்பெருமான்
அடிமைக்கண்

(அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய

வஞ்சனை பண்ண

(அதற்கு நான் நோவுபட்டிருக்கிற மையத்திலே)

தென்றலும்

தென்றல்காற்றும்
திங்களும்

பூர்ணசந்திரனும்
என்னை

என்னை
ஊடு அறுத்து நலியும் முறைமை

உள்ளே பிளந்துகொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை
அறியேன்

அறிகின்றிலேன்
குயிலே!

ஓ குயிலே!
நீயும்

(என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும்
என்றும்

எந்நாளும்
இக்காலில்

இந்தக் சோலையிலே
இருந்து இருந்து

இடைவிடாமலிருந்துகொண்டு
என்னை

(ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை
ததைத்தாதே

ஹிம்ஸியாமலிரு,
இன்று

இன்றைக்கு
நாராயணனை வர கூவாயேல்

ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில்
இங்குத்த நின்றும்

இந்தச் சோலையிலிருந்து
துரப்பன்

உன்னைத் துரத்திவிடுவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பரத்வமொன்றே என்நெஞசிற்பட்டிருந்தால் அவனை நான் ஆசைப்படமாட்டேன், முன்பொருகால், த்ரிவிக்ரமாவதார வ்யா ஜத்தாலே வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தானென்று கேள்விப்பட்டேனாகையால் அவன்மிக்க ஸௌசீல்யகுணம் பொருந்தியவனனென்றுணர்ந்து, தன்னை ஆசைப்படாத வுலகங்கட்கே அவன் அவ்வளவு காரியம் தன்பெறாகச் செய்தபோது ஆசைப்பட்ட நம்மை உபேக்ஷிப்பனா என்று நினைத்து அவ்வுலகளந்த பெருமான் திருவடிகளில் நான் கைங்கரியம் பண்ணிரும்பினேன், அக்கைங்கரியம் அடியேனுக்கு ப்ராப்தமாக வொண்ணாதபடி அப்பெருமான் சில மிறுக்குக்களைப் பண்ணவே, தென்றல் திங்கள் முதலிய பாதகபதார்த்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு ‘நாம் இவளை ஹிம்ஸிப்பதற்கு இதுவே வாய்த்த ஸமயம், எம்பெருமான் இவளை இகழ்ந்திருக்கும் இச்சமயமே நாம் தாராளமாக இவளைவருத்தக்கூடிய சமயமாகும்‘ என்று துணிந்து அவை என்னைப் படுத்தும்பாடுகளை நான் வாய்கொண்டு சொல்லவல்லேனல்லேன் அவை என்னை பரிதபித்துக்கொண்டு கத்றாநிற்கையில் அச்சோலையிற் குயிலானது தன் களிப்புக்குப் போக்குவீடாக இனியபாட்டுகளைப் பாடத்தொடங்கவே அது இவளுக்கு மிகவும் பாதகமாகி, ‘ஓ குயிலே! தென்றலும் திங்களும் என்னை ஹிம்ஸிப்பது ஸ்வல்பமாய், உன்னுடைய ஹிம்ஸையே அளவற்றதாயிருக்கிறது, அல்லும்பகலும் இடைவிடாதேயிருந்து நீ என்னை ஹிம்ஸிக்கிறாய், இதற்காகவா உன்னை நான் இச்சோலையிலே இடங்கொடுத்து வாழ்விப்பது? நன்று செய்கின்றாய்!, இதுவரை போனது போகட்டும், இந்தக்ஷணத்தில் திருமால் இங்கே எழுந்தருளும்படி கூவ்வல்லையாகில் கூவி அவனை இங்குவரவழை, இல்லையாகில் தடியெடுத்துரைத்து உன்னை இச்சோலையிலிருந்து துரத்திவிடுவென் – என்கிறார்.

“(அன்றுலக மளந்தானை யுகந்து) உறங்குகிற ப்ரஜைக்கு முலை கொடுக்கும் தாயைப்போல் இவையறியாதிருக்கத் தானே இவற்றின் தலையிலே திருவடிகளை வைத்தவனையுகந்து.“ என்ற வியாக்கியமான ஸ்ரீஸூக்தி காண்க. உகந்து என்றது உகக்க என்றபடி, எச்சத்திரிபு, (“மழைபெய்து நெல்விளைந்தது“ எனபதுபோல.) “சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை“ என்ற நன்னூசூத்திர மறியத்தக்கது.

அடிமைக்கண் – கண் – ஏழாம்வேற்றுமையுருபு, அடிமையிலே என்றபடி. வலிசெய்தலாவது – இளைத்தவர்கள் விஷயத்தில் பலிஷ்டர் செய்யும் செயலைச் செய்தல், (அலக்ஷியஞ்செய்தல், – மாட்டேனென்னுதல்.)

(தென்றலு மித்யாதி) தென்றலும் திங்களும் என்னை வந்து ஹிம்ஸிப்பதற்கு என் நியாயமுண்டு, நானாசைப்பட்ட விஷயத்தின் ரஸம் இவ்வற்றுக்குச் சிறிதாகிலும் தெரியுமாகில் இவைஹிம்ஸிப்பதையும் ஒருவாறு போக்யமாகக்கொள்ளலாம்,? அவ்விஷயத்தின் வாசியை அறியமாட்டாத இவை என்னைவந்து ஹிம்ஸிப்பதற்கு என்னநியாயமிருக்கிறது?. “ராவணன் நடுவே பஜகுந்து நலிந்தாப்போலே தென்றலும் சந்த்ரனும் நடுவேவந்து என்னை நலிகைக்கீடாயிருப்பதொரு முறையுண்டாக அறிகிறிலேன்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. “நலியும்முறைமையறியேன்“ என்றசொல்நலத்தால் – தம்பதிகளைக் கூட்டிவைப்பது இவற்றுக்கு நியாயமேயொழிய இப்படி வருத்தப்படுத்துவது நியாயமாகமாட்டாது என்ற கருத்து வெளிவருமென்ப. தன்மகனான சிறிய திருவடிக்கிருந்த விவேகத்தில் காற்கூறும் இக்காற்றுக்கு இல்லையே.

(குயிலே! நீயும் இக்காலில் இருந்திருந்து என்னைத்ததைத்தாதே.) சோலையில் குயிலினுடைய இருப்பே இவளுக்கு ஹிம்ஸைக்கு உடலாயிருக்கிறபடி. “பைம்பொழில்வாழ் குயில்காள்! … எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என்செய்வதே? என்று இவ்வாண்டாள் தானே மேல் அருளிச்செய்கிறாளாகையாலே குயிலானது விரஹ்தசையிலே எம்பெருமானது திருமேனி நிறத்தை நினைப்பூட்டி இடைவிடாது வருத்துமென்க.

English Translation

The Lord whom I love has denied me the pleasure of service. I do not know why even the Moon and the breeze pierce and hurt me. Not you too, O Koel, staying on to add punch! If you do not call my Narayana now, I shall drive you out of here forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top