(552)

(552)

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்

நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்

தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லேதிரு மாலை

ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் அவனைநான் செய்வன காணே

பதவுரை

தேம் கனி

இனிமையான பழங்களையுடைய
மா

பொழில்  மாந்தோப்பிலே
செம் தளிர் கோதும்

சிவந்த துளிர்களைவாயலகால் கொந்துகிற
சிறு குயிலே!

இளங்குயிலே!
சார்ங்கம்

தனது வில்லை
வளைய வலிக்கும்

வளைத்து வலிக்கும் சக்தியையுடைய
தட கை

பெரிய திருக்கைகளையுடையனாய்
சதூரின்

ஸகலவித ஸாமா;த்தியமுடையனான எம்பெருமான்
பொருத்தம் உடையன்

ப்ரணயாPதியிலும் வல்லமை பெற்றவன்;
நாங்கள்

அவனும் நானும் ஆக இருவரும்
இருந்து

சோர்ந்திருந்து
எம்மில் ஒட்டிய

எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட
கச்சங்கம்

ஸங்கேதத்தை
நானும் அவனும் அறிதும்

நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார்;
ஆங்கு திருமாலை

தூரிரஸ்தனாயிருக்கிற ச்ரிய; பதியை
ஒல்லை விரைந்து

மிகவும் சீக்கிரமாக
கூ கிற்றி

ஆகில்  நீ
அவனை

(பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில்
நான் செய்வன

நான் செய்யப் போகிற மிறுக்குக்களை
காண்

காணக்கடவை

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலடியிலுள்ள இரண்டு விசேஷணங்களும் எம்பெருமானுடைய வீரத்தன்மையையும், அந்தரங்கர்பக்கல் அன்புடைமையையும் விளக்குவன. கண்டகாட்சியில்தானே எதிரிகள் வில்லைப் பொகட்டுவிட்டு முதுகுகாட்டி ஓடும்படி தனது ஸ்ரீசார்ங்கத்தை வளைக்கவல்ல வீரத்தனம் மிக்கவன் என்கிறது முதல்விசேஷனம். அந்தப்புரத்தில் ச்ருங்காரஸங்கொண்டாடுகைக்குப் பாங்கான் ப்ரணயித்வமு முடையவன் என்கிறது.- பொருத்தமுடையன் என்று. இவ்விரண்டாலும் சொல்லிற்றாவது என்னென்னில்; அவ்வெம்பெருமான் என்னிடம் வரநினைத்தால் அதற்கு இடையூறாக எவ்வளவு விரோதங்கள் நேர்ந்தாலும் அவற்றைத் தொலைத்தருள்வதற்குத்தக்க வலிவுபடைத்தவன் என்பதும், ப்ரணயிநிகளுடன் கலக்குங் காலத்தில் ‘வாத்ஸ்யாயநத்தில் கைதேர்ந்தவன் என்னும் படியிருப்பன் என்பதும் கூறப்பட்டன.

அவ்வெம்பெருமானுடைய சித்தவ்ருத்தியும் என்னுடைய சித்தவ்ருத்தியும் எங்களிருவர்க்கும் தெரியுமேயொழிய வேறொருவர்க்கும் தெரியாதென்கிறாள் இரண்டாமடியில். இருவருமாய்க் கலக்கும்போது “நான் உன்னையொழிய ஜீவிக்கமாட்டேன்’ நான் உன்னையொழிய ஜீவிக்கமாட்டேன்” என்றே இருவரும் சொல்லிக்கொள்வார்களாம். இதுவாய்த்து இருவரும் தம்மிலிருந்து ஒட்டியகச் சங்கம். இந்தசங்கேதமானது கேவலம் வாய்ச்சொல்லாகப் போய்விடாமல் காரியத்திலும் பர்யவஸிக்கும்படி செய்யவேண்டியது (குயிலே!) உன்கடமைகாண் என்கை உள்ளுறை.

மூன்றாமடி கோகிலஸம்போதநம்’ என்துயரைக்கக்கண்டிருக்கிற நீ உடனே எம்பெருமானும் நானும் கூடும்படி முயற்சிபண்ணவேண்டியது உன்காரியமாயிருக்க, அதில் நோக்கம்வைக்காமல் தன்வயிற்றை நிறைத்துக் கொள்வதையே ப்ரயோஜநமாகக்கருதிக் கிடக்கிறாயே!;  இனிமையான கனிகள் நிறைந்த மாஞ்சோலையிலே செவ்விய தளிர்களை வாயலகால்கொந்திக்கொண்டு அதுவே தொழிலாகக்கிடக்கிறாயே!- என்று அக்குயிலின்காதில் கடுமையாகப் படும்படி சொல்லவே, அதைக்கேட்ட குயில், ‘அம்மம்ம! உனக்கு வேண்டியதைச் செய்வதற்கு நான்’ ஸித்தனாயிருக்கிறேன்; நான் என்னசெய்ய வேணும்! சொல்’ என்றுகேட்க ‘கைகழிந்து போன எம்பெருமான் மீண்டு. இங்கே விரைந்து ஓடிவரும்படி கூவினாயாகில் இதுவே எனக்குநீசெய்யும் மஹோபகாரம்’ என்று இவள்சொல்ல; அதற்கு அக்குயில் ‘அம்ம? எம்பெருமானோடு உனக்கு ஸமாகமம் பண்ணிவைக்கும்படி நியமித்தாய்’ இதுலகுவானகாரிய மன்று’ இத்தனை பெரியகாரியத்தை நான்ஸாதித்துத்தந்தால் எனக்கு என்ன ப்ரதிபலன் தருவதாக நீநினைத்திருக்கிறாய்? என்று கேட்க; அதற்கு மறுமொழியாக “அவனைநான் செய்வன தானே” என்கிறாள். அதாவது – நீ கூவ, அவன் இவ்விடம் வந்து சேர்ந்தவாறே இத்தனை நாள் அவன் என்னைப் படுத்தினபாடெல்லாம் ஒரு க்ஷணத்திலே அவன் என்கண் வட்டத்திலே படும்படி செய்யப்போகிறேனே’ அந்த விநோதத்தைக் காண்கை உனக்குலகுவான லாபமோ? ப்ரமப்ரயோஜநமன்றோ? அதுபோராதே? என்கிறாள்.

“அவனைநான் செய்வன” என்கிறவிவள் அவனை என்செய்வதாக நினைத்திருக்கிறாள்? காலாலும் கையாலும் துகைப்பதாக நினைத்திருக்கிறாளோ? நாயே பேயே என்று வைய நினைத்திருக்கிறாளோ? கம்பத்தில் கட்டிப்புடைக்க நினைத்திருக்கிறாளோ? என்னில்; இவையொன்றும் செய்யநினைத்திலள்; அவன் வந்து நிற்க, அவனுக்கு முகங்கொடாதே முகத்தைத் திருப்பிக்கொண்டிருக்க வாய்த்து நினைத்திருக்கிறாள். நெடுநாள் பட்டினிகிடந்தவன் முன்னே சோற்றை இட்டு வைத்து அதனை அவன்புஜிக்கவொட்டாமல் தகைந்தால் அந்தப்பசியன் எப்பாடுபடுவானோ அப்பாடுபடுவனிறே இச்செயலுக்கு எம்பெருமான். “பொய்யச்சங் காட்டி நீ போதியேலும் இன்னமென்கையகத்து ஈங்கொருநாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே” (பெருமாள் திருமொழி கூ – அ) என்றவிடத்துள்ள விசேஷார்த்தம் இங்கு அது ஸந்திக்கத் தக்கது. “வண்டார் பூ மாமலர்மங்கை மணநோக்கமுண்டானே.” என்றபடி நாயகியின் கடா‘வீக்ஷணத்தையே ஊணாகக்கொண்டிருக்கிற எம் பெருமானுக்கு அந்த ஊண் தடைப்பட்டால் அதற்கு மேற்பட்ட துடிப்பு இல்லையாம். மற்றபடி காலாலுதைப்பதும் கையால் குத்துவதுமெல்லாம் (மமசிரஸிமண்டநம் கோபிகர்தாடநம்) என்றிருக்கிற எம்பெருமானுக்குப் ப்ரமயோக்ய மேயேதலால் அவையெல்லாம் சிi‘யாகமாட்டாது; முகத்தை மாறவைப்பதே பெருத்தத்தண்டனையாம் என்க. இப்படிப்பட்ட சிi‘யை அவனுக்கு நான் செய்யும்போது அதை நீ காணப்போகிறாயன்றோ? அந்தக்காட்சி எளிதில் கிடைக்கக்கூடியதோ? அந்த ப்ரமப்ரயோஜநத்திற்காகக் கூவாய் என்கிறாளாய்த்து

English Translation

My Lord Tirumal is skilled in wielding the Sarnga bow, he is my ideal match; he and I share many secrets. O Little Koel sipping nectar from the tender red leaves of the Mango tree, you go and call him quickly, and then you can watch the things I do with him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top