(548)
என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய்
பதவுரை
| குயிலே! |
– |
ஓ குயிலே! |
| என்பு உருகி |
– |
எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல் |
| இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா |
– |
சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக்கிடக்கின்றன வில்லை’ |
| பல நாளும் |
– |
நெடுங்காலமாக |
| துன்பம் கடல்புக்கு |
– |
விச்லேஷவ்யஸநமா கிறகடலிலே அழுந்தி |
| வைகுந்தன் என்பது ஓர் தோணிபெறாது |
– |
ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல் |
| உழல்கின்றேன் |
– |
அக்கடலுக்குள்ளேயே தட்டித்தடுமாறிக் கொண்டிராநின்றேன்: |
| அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது |
– |
அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை |
| நீயும் அறிதி நீயும் அறிவாயன்றோ? |
– |
பொன் போன்ற மேனியையுடையனாய் |
| பொன் புரை மேனி |
– |
கருடனைக் கொடியாகவுடையவனான |
| கருளன் கொடி உடை |
– |
“தர்மமே வடிவெடுத்தவன்” என்னப்படுகிற கண்ணபிரானை |
|
புண்ணியனை |
||
| வர கூவாய் |
– |
இங்கே வரும்படி கூவு |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- குயிலே! எம்பெருமானைப் பிரிந்தனாலே எனக்குண்டான க்லே ? ம் மேலெழத் தோல்புரையே போமதன்று’ எலும்புங் கூட உருகும்படியாயிரா நின்றது’ அவ்வளவேயா, ஒருநொடிப் பொழுதும் கண் உறங்குவதுமில்லை. ????????????? (‘அநித்ரஸ் ஸததம்ராம:’) என்றும் “உண்ணாதுறங்காது” என்றும்- என்னைப் பிரிந்து அவன்படவேண்டிய பாட்டை நானன்றோ இப்போது படரநின்றேன். இப்படிகழிவது ஒருநாளா இரண்டு நாளா? பலநாளாகவே பிரிவாற்றாமையிகிற துக்கசாகரத்திலே யழுந்தி அந்தஸாகரத்தைக் கடத்தவல்ல “விஷ்ணு போதம்” என்று ப்ரஸித்தமானதொரு தோணியைப் பெறாது வருந்திக் கிடக்கின்றேன் காண். ‘என்ன தான் விச்லேஷம் நேர்ந்தாலும் இப்படிகூட நோவுபடலாமோ?’ என்று நினைக்கிறயோ, அப்படி நினையாதே கொள்’ ஏதோ பாக்யத்தாலே இன்று நீ ழூ தூரிவிரியமலருழக்கித் துணையோடும் பிரியாதேயிருந்தாயாகிலும் ‘ஸம்ச்லேஷா: விச்லேஷாந்தா: விச்லேஷா: ஸம்ச்லேஷாந்தா:” என்ற கணக்கிலே இதற்கு முன்பு நீயும் பிரிந்து துன்பப்பட்டேயிருப்பாய்’ இனிமேலும் என்றைக்காவது உனக்குப் பிரிவு நேராதிருக்கப் போகிறதில்லை’ அப்போது நீ துன்பப்படாதிருக்கப் போகிறதில்லை’ ஆகையாலே அன்பர்களைப் பிரிந்தால் துயரம் பொறுக்கமுடியாததுதான் என்னும் விஷயத்திலே உனக்கு ஏற்கனவே வயத்பத்தியிருப்பதனாலே இப்போது நான் துன்பப்படுவதைப் பற்றி நீ அவஹேளநமாக ஒன்றும் நினைக்கலாகாது’ இத்துன்பத்தைத் தீர்க்குமுயாயமமே நீ செய்ய வேண்டும்’ அதாவது-பெரியதிருவடியை த்வஜமாகவுடையனான அப்பெருமான் இங்கே எழுந்தருளும்படி கூவக்கடவை என்கிறாள்.
“பொன்புரை மேனி” என்றதைக் கருடனுக்கு விமோஷணமாக்கத் தகுமாயினும் புண்ணியனுக்கே விமோஷணமாக்குவதில் ஸ்வாரஸ்யம் மிகும். “தன்னோடு கலந்தபோது பொன்போலே திகழ்கிறவடிவும் தானுமாக நின்ற நிலை’ பிரிந்தபோதும் வடிவு அப்படியேயிருக்கு மென்றிருக்கிறாள்’ பிரிந்தபோது அவனிருக்கும்படி தான் அறியாளே’ பிரிவாற்றாமையாலே நொந்து விவர்ணனாயிருந்தானாகில் குயிலின்காலிலே விழப்பார்த்திருக்குமோ? வாரானோ என்றிருக்கிறாள். என்ற வியாக்கிமான ஸ்ரீஸூக்தியின் இனிமையைக் காண்மின்.
“கண்ணனென்பதோர் தோணிபெறாது என்னாமல் “வைகுந்தனென்பதோர் தோணிபெறாது” என்றதற்குக் கருத்தென்னென்னில்: உகந்தருளின நிலங்களாகிய அர்ச்சாவதார ஸ்தலங்களிலேபோய் அநுபவிக்கப் பாரித்தேன்’ அங்கு, அணைத்தல் வார்த்தை சொல்லுதல் ஒன்றுங் கிடையாமையாலே அப்படி பாரிமாறின விபவாவதாரங்களிலே நெஞ்சைச் செலுத்தினேன்’ அவை தீர்த்தம் ப்ரஸாதித்துவிட்டுக் கழிந்துபோனபடியாலே பரமயதநாதனளவிலே சென்றேன்-அவனாகிலும் கிடைக்கக் கூடுமோவென்றுபார்த்தேன்’ அவனும் கிடைக்கப்பெற்றிலேன் என்கிறாள். (“நோய் அது.”) அது – முதல்வேற்றுமைச் சொல்லுருபு க்ருளன் + கொடி’ கருளக்கொடி.
புண்ணியனை = ??????????????? (‘ராமோ விக்ரஹவாந் தர்ம.’) என்றும் (‘க்ருஷணம்தர்மம் ஸ்நாதநம்’) என்றும், ‘அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியா!” என்றும் எம்பெருமானை ஸாக்ஷாத் யுண்ணியமாகச் சொல்லப்பட்டிருப்பது காண்க. புண்ணியனை வர கூவாய்ஸ்ரீ “நான் பிறர்நோவுபடப் பொறுத்திருக்கமாட்டேன்’ இதுவேகாண் நான் ஸாரமாகக் கொண்டிருக்கிற தர்மம்” என்று சொன்னவராய்த்து அவர்’ அப்படி சொல்லியிருப்பதற்கும் இப்போது இப்படி செய்துபோருவதற்கும் சிறிதும் பொருத்தமில்லையேயென்று சொல்லிக் கூவாய் என்பதாகக் கருத்துரைப்பர். …. … … …. …. … … … … (ச)
English Translation
My body has melted to the bones; my eyes have not closed for many days. Cast into the ocean of misery, I am drifting without a lifeboat. O Koel who knows what is to be separated from a beloved, go and call the blessed Lord of golden hue, –he bears a Garuda banner.
