(1975)
அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு,
வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி,
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார்
நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே?
பதவுரை
|
வெறி ஆர் |
– |
பாரிமளம் மிக்க |
|
பொழில் சூழ் |
– |
சோலைகளாலே சூழப்பட்டு |
|
வியன் |
– |
வியக்கத்தக்கதான |
|
குடந்தை |
– |
திருக்குடந்தையிலே |
|
மேவி |
– |
பொருந்தியிருப்பவரும் |
|
சிறியான் ஓர் பிள்ளை ஆய் |
– |
(க்ருஷ்ணாவதாரத்தில்) ஒப்பற்ற சிறு குழந்தையாய் |
|
மெல்லநடந்திட்டு |
– |
மெதுவாக நடந்து சென்று |
|
உறி ஆர் நறு வெண்ணெய் |
– |
உறிகளிலே சேமித்திருந்த மணம்மிக்க வெண்ணெயை |
|
உண்டு உகந்தர் தம்மை |
– |
வாரியமுது செய்துதிருவுள்ள முகந்தவருமான இப்பெரியவரை |
|
அறியோம் என்று உரைக்கல் |
– |
அறிகின்றிலோம் என்று சொல்லுதல் |
|
எமக்கு ஆமே |
– |
எமக்குத் தகுமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “அன்னே யிவரையறிவன்” என்ற பரகால நாயகியை நோக்கித் தோழியானவள் ‘நங்காய்! இவரை எங்ஙனே அறிந்தாய்? ‘இன்னாரென்றறியேன்’ என்று முன்பு சொன்னாய்; இப்போது அறிவேனென்கிறாய்; பொருந்தாத வார்த்தை யாயிருக்கின்றதே!’ என்ன் இவரை நான் அறிவெனென்பதே உண்மையென்கிறாள்.
இவரையறியோம் என்று நான் எங்ஙனே சொல்லக்கூடும்? “இங்கே போதுங்கொலோ இனவேல் நெடுங்கண் களிப்பக், கொங்கார்சோலைக் குடத்தைக் கிடந்தமால் இங்கே போதுங்கொலோ” என்று நான் மநோரதித்த படியே வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவியான பெருமானன்றோ எழுந்தருளியிருக்கிறார்; ‘இவன் இதைத் திருடினான்’ என்று சொல்லவொண்ணாதபடியான இளம்பிராயத்தையுடையனாய்ப் பொய்யடியிட்டுப் போய்ப்புக்கு உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்து ‘ஆச்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சமுள்ள த்ரவ்யத்தை உட்கொள்ளப் பெற்றோம்’ என்று உகந்தாப் போலே என்னைத் தழுவியணைத்துத் தலைதடுமாறாகப் பாரிமாறி ஆநந்தத்தின்மேலெல்லையிலே யிருக்கினற இவரை ‘அறியோம்’ என்று எங்ஙனே சொல்லக்கூடு மென்கிறாள்.
English Translation
He resides in the fragrant groves-surrounded Kudandai. He came as a little child and quickly waklked over to the rope-shelf, and ate butter, with pleasure, How can we say we do not know him?
