(1968)
காமன் றனக்கு முரையல் லேன்கடல் வண்ணனார்,
மாமண வாள ரெனக்குத் தானும் மகன்சொல்லில்,
யாமங்கள் தோறெரி வீசு மென்னிளங் கொங்கைகள்,
மாமணி வண்ணர் திறத்த வாய்வளர் கின்றவே.
பதவுரை
|
காமன் தனக்கு முறை அல்லேன் |
– |
மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன் |
|
சொல்லில் |
– |
ஏனென்னில் |
|
கடல் வண்ணனார் |
– |
கடல்வண்ணரான கண்ணபிரான் |
|
எனக்கு மா மணவாளர் |
– |
எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே) |
|
தான் |
– |
அந்த மன்மதன் தான் |
|
எனக்கு மகன் |
– |
எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்) |
|
யாமங்கள் தோறு |
– |
எப்போதும் |
|
எரி வீசும் |
– |
நெருப்பைத் தூவுகின்றாள் |
|
என் இள கொங்கைகள் |
– |
எனது இளமுலைகளோ வென்னில் |
|
மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற |
– |
நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் கடல்வண்ணனான எம்பெருமானை எப்போதும் மணவாளனாகக் கொண்டேனோ அப்போதே மன்மதன் எனக்கு மகனாய்விட்டான்; (மன்மதனுக்குத் தந்தையன்றோ பகவான்). முகனானவன் பெற்றதாயை இங்ஙனே கொலை செய்வது வழக்கோ? ஐகயைப் பிடித்த கணவனார் என்ன நலிவுசெய்தாலும் பொறுக்கலாம்; வயிற்றிற் பிறந்த மகன் நலிவு செய்ய என்ன முறைமையுண்டு? என்கிறாள் முன்னடிகளில்.
மன்மதன் செய்கிற ஹிம்ஸை ஏதென்ன, யாமங்கடோறு எரிவீசும் என்கிறாள். ஸர்வகாலத்திலும் தபிக்கிறா னென்றபடி. மன்மதன் இப்படு நெருப்பை வீசச்செய்தேயும் எனது இளமுலைகள் தாம் கொண்ட கொள்கையை விடுகின்றில்; அப்பெருமானுக்கே அற்றுத்தீர்ந்தனவாய் விம்மி வளர்கின்றனவென்கிறாள்.
English Translation
This Madana, god of love, is no relative of mine. The ocean-hued Lord alone being my bridegroom, through him, he is my son, But alas, the way he scorches me with lust-fire every hour of the day! My tender breasts have learnt to live with the pain from the Lord of gem hue.
