(1944)
கூவாய் பூங்குயிலே,
குளிர்மாரி தடுத்துகந்த,
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,
கூவாய் பூங்குயிலே.
பதவுரை
|
பூகுயிலே |
– |
அழகிய குயிலே! |
|
குளிர்மாரி |
– |
(இந்திரனால் பெய்விக்கப் பட்ட) குளிர்மழையை |
|
தடுத்து |
– |
(கோவர்த்தன மென்னுங் கொற்றக் குடையினால்) தடைசெய்து |
|
உகந்த |
– |
திருவுள்ளமுவந்தவனும் |
|
மா வாய்கீண்ட |
– |
நேசியென்னுங்குதிரையின் வாயைக்கீண்டவனும் |
|
மணி வண்ணனை |
– |
நீலமணி நிறத்தனுமான எம பெருமானை |
|
வரகூவாய் |
– |
வருமாறு கூவவேணும் |
|
பூங் குயிலே! கூவாய்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “மாவாய் கீண்ட” என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “பகாஸூரனுடைய வாயைக்கிழித்த” என்று பொருள் காண்கிறது. இஃது அச்சுப் பிழையாயிருக்கலாமோ வென்று ஸந்தேகிக்கவுரியது அருளிச்செயலிற் பலபலவிடங்களில் “மாவாய் கீண்ட” என்றும் “மாவாய்பிளந்த” என்றும் வருவதுண்டு; இங்ஙனே வருமிடந்தோறும் (குதிரைவடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மஸுரனுடைய வாயைக் கிழித்த) என்றே பொருளுரைக்கப் பட்டுள்ளது. மா-குதிரை.
English Translation
Coo, Coo, Good koel! Stopping a halistorm, he did teat the jaws of a mighty horse, -gem Lord! Coo his arrival!
