(1943)

(1943)

கரையாய் காக்கைப்பிள்ளாய்,

கருமாமுகில் போல்நிறத்தன்,

உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,

கரையாய் காக்கைப்பிள்ளாய்.

 

பதவுரை

காக்கைப் பிள்ளாய்

காக்கைக்குட்டியே!

கரு மா முகில் போல் நிறத்தன்

காளமேகநிறத்தனாய்

உரை ஆர்தொல் புகழ்

சொற்களில்  நிரம்பிய நித்ய கீர்த்தியையுடையனான

உத்தமனை

புரஷோத்தமனை

வர கரையாய்

வருமாறு கூப்பிடவேணும்

காக்கைப் பிள்ளாய்! கரையாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வீட்டின் முற்றத்திலே காக்கை வந்திருந்துகொண்டு கத்தினால் இஷ்ட ஜநத்தின் வருகை நேருமென்று சகுன சாஸ்திரிகள் சொல்லுவதுண்டு; அஃதறிந்து ‘கரையாய் காக்கைப்பிள்ளாய்!” என்கிறாள். “காக்கை வாயிலுங் கட்டுரைகொள்வர் காரணாகருளக் கொடியானே!” (5-1-1). என்ற பெரியாழ்வார்திருமொழி இங்கு உணரத்தக்கது.

‘காக்காய்!’ என்னாதே ‘காக்கைப்பிள்ளாய்! என்றது கௌரவப்பேச்சு’ பகவத் விஷயத்தில் உபகாரம் செய்பவர்களை மாரியாதையுடனே துதித்துச்சொல்ல வேண்டுதல் மரபு என்பது இதனால் ஸூசிப்பிக்கப்படுமென்ப. கரைதல் – ஒலிசெய்தல்.

 

English Translation

Caw, Caw, Good Crow, Sir! Dark as a cloud, he;s spoken of as perfection personified! Caw his arrival!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top