(1918)
அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ ஆயர் மடமக் களைப்,
பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் பின்னே சென்றொளித் திருந்து,
அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர வேரி டையா ரிரப்ப,
மங்கைநல் லீர்வந்து கொண்மின் என்றுமரம் ஏறி யிருந்தாய் போலும்.
பதவுரை
|
நம்பி |
– |
கண்ணபிரானே! |
|
ஆயர் மடம் மக்களை |
– |
இடையர்களுக்கு விதேயரான பெண்பிள்ளைகளிடத்தில் |
|
அங்ஙனும் |
– |
அப்படியும் |
|
தீமைகள் செய்வர்களோ |
– |
தீம்புகள் செய்யத் தகுமோ? |
|
பங்கயம் நீர் |
– |
தாமரைப்பொய்கையிலே |
|
குடைந்து |
– |
அவகாஹித்து |
|
ஆடுகின்றார்கள் பின்னே சென்று |
– |
நீராடப்போனவர்களின் பின்னேபோய் |
|
ஒளித்து இருந்து |
– |
மறைந்து கொண்டிருந்து |
|
அங்கு |
– |
அவ்விடத்தில் |
|
அவர் |
– |
அந்தப் பெண்பிள்ளைகளினுடைய |
|
பூ துகில் |
– |
அழகிய சேலைகளை |
|
வாரிக் கொண்டிட்டு |
– |
வாரிக்கொண்டு |
|
(அவ்வளவிலே) |
||
|
அரவு ஏர் இடையார் |
– |
அரவுபோலே நுண்ணிய இடையையுடையரான அப்பெண்கள் |
|
இரப்ப |
– |
(அத்துகில்களை) யாசிக்க |
|
நல் மங்கைமீர் |
– |
அழகிய பெண்காள்! |
|
வந்து |
– |
(நானிருக்குமிடத்திலே) வந்து |
|
கொள்மின் |
– |
(உங்கள் துகில்களைப்) பெற்றுக் கொள்ளுங் கோள்’ |
|
என்று |
– |
என்று சொல்லி |
|
மரம் ஏறி இருந்தாய் போலும் |
– |
மரத்தினுச்சியில் ஏறியிருந்தாயாமே |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் கண்ணபிரானைப் பொடிவதற்குச் சிறிது தொடங்கின யசோதை இது முதலாக மூன்று பாசுரங்களிலே தான் கேள்விப்பட்டிருந்த சில சேஷ்டிதங்களை யெடுத்துரைத்து இப்படியும் தீமை செய்யலாமோ வென்கிறாள்.
English Translation
O Lord! How could you do such things to innoent cowherd girls? You followed them to the lotus tank, hid and made off with their clothes while they bathed, climbed up a tree and said, “Girls, come up and take your clothes!” -while the thin waisted girls stood in the water pleading
