(1841)

(1841)

ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர்

கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,

நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு,நன்னறுந்

தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே.

பதவுரை

ஏறு ஏறி

விருஷயத்தை வாஹனமாகக்கொண்டு ஏறியிருப்பவனும்
இலங்கும் ஒன் மழு பற்றும்

விளங்குகின்ற அழகிய மபுவாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டிருப்பவனுமான
ஈசற்கு

சிவபிரானுக்கு
இசைந்து

திருவுள்ளமிணங்கி
உடம்பில் ஓர் கூறு

தனது திருமேனியில் ஒரு பாகத்தை இருப்பிடமாகக் கொடுத்தருளினவனும்
குலம்

சிறந்த
மா மகட்கு

பெரியபிராட்டியார்க்கு
இனியான்

போக்யனுமான எம்பெருமான்
இன் இன வண்டு

இனிய இளவண்டுகளானவை
நாறு

மணம்மிக்க
செண்பகம்

செண்பகப்பூவையும்
மல்லிகை மலர்

மல்லிகைப்பூவையும்
புல்கி

தழுவி
நல் நறு தேறல்

நல்லமணமுள்ள தேனிலை
வாய் மடுக்கும்

வாய்வைத்துப் பருகுமிடமான
திருக்கோட்டியூரான்

திருக்கோட்டியூரிலுள்ளான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அன்பே வடிவான பிராட்டியோடு வாசியற அஹங்காரமே வடிவான ருத்ரனுக்கும் திருமேனியிலே இடங்கொடுக்கும் சீலகுணம் வாய்ந்த பெருமான் திருக்கோட்டியூரிலே ஸந்நிஹித னென்கிறார்.

English Translation

To the axe-wielding bull-riding siva, the Lord obligingly gave a place on his person, as also to the lady of the lotus Lakshmi, He resides in Tirukkottiyur where beautiful, youthful bees hover over fragrant senbakam and Jasmine flowers, then sip aroma-nectar and dance

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top