முதல் திருவந்தாதி திருமொழி – 7

(2142)

உலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்

விலகு கருங்கடலும் வெற்பும், – உலகினில்

செந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்

புந்தியி லாய புணர்ப்பு.

விளக்க உரை

(2143)

புணர்மருதி னூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து,

மணமருவ மால் விடையேழ் செற்று, – கணம்வெருவ

ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்,

சூழரவப் பொங்கணையான் தோள்.

விளக்க உரை

(2144)

தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,

கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்

கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,

நாணாமை நள்ளேன் நயம்.

விளக்க உரை

(2145)

நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,

உயவேன் உயர்ந்தவரோ டல்லால், – வியவேன்

திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,

வருமாறென் நம்மேல் வினை?

விளக்க உரை

(2146)

வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,

தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்

கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்

கரியானைக் கைதொழுதக் கால்.

விளக்க உரை

(2147)

காலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த

மேலைத் தலைமறையோர் வேட்பனவும், – வேலைக்கண்

ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,

பேராழி கொண்டான் பெயர்.

விளக்க உரை

(2148)

பெயரும் கருங் கடலே நோக்குமாறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்

தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,

ஒருவனையே நோக்கும் உணர்வு.

விளக்க உரை

(2149)

உணர்வாரா ருன்பெருமை? யூழிதோ றூழி,

உணர்வாரா ருன்னுருவந் தன்னை?, உணர்வாரார்

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்

பண்ணகத்தாய் நீகிடந்த பால்?

விளக்க உரை

(2150)

பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்

மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், – ஆலன்று

வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ?

சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு.

விளக்க உரை

(2151)

சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு,

சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்

தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,

நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top