முதல் திருவந்தாதி திருமொழி – 2

(2092)

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்

தாயவனை யல்லது  தாந்தொழா – பேய்முலைநஞ்

சூணாக வுண்டான் உருவோடு பேரல்லால்

காணாகண் கேளா செவி.

விளக்க உரை

(2093)

செவிவாய் கண்மூக் குடலென் றைம்புலனும்

செந்தீபுவிகால் நீர்வண் பூதமைந்தும் -அவியாத

ஞானமும் வேள்வியும் நல்லறமுமென்பரே

ஏனமாய் நின்றாற் கியல்வு.

விளக்க உரை

(2094)

இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,

முயல்வார் இயலமரர் முன்னம், – இயல்வாக

நீதியா லோதி நியமங்க ளால்பரவ,

ஆதியாய் நின்றார் அவர்.

விளக்க உரை

(2095)

அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி, இவரிவ

ரெம்பெருமா னென்று, – சுவர்மிசைச்

சார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த

மூர்த்தி யுருவே முதல்.

விளக்க உரை

(2096)

முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்

முதலாவான் மூரிநீர் வண்ணன், – முதலாய

நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,

பல்லார் அருளும் பழுது.

விளக்க உரை

(2097)

பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி

அழுதேன் அரவணைமேல் கண்டு – தொழுதேன்,

கடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்

அடலோத வண்ணர் அடி.

விளக்க உரை

(2098)

அடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,

முடியும் விசும்பளந் ததென்பர், – வடியுகிரால்

ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள்

ஊர்ந்தா னுலகளந்த நான்று

விளக்க உரை

(2099)

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்

தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை – ஊன்றி,

பொருது டைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,

மருதிடைபோய் மண்ணளந்த மால்.

விளக்க உரை

(2100)

மாலுங் கருங்கடலே என்நோற்றாய், வையகமுண்

டாலின் இலைத்துயின்ற ஆழியான், – கோலக்

கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்

திருமேனி நீதீண்டப் பெற்று.

விளக்க உரை

(2101)

பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,

செற்றார் படிகடந்த செங்கண்மால், – நற்றா

மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,

நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top