முதல் திருவந்தாதி திருமொழி – 1

(2082)

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.

விளக்க உரை

(2083)

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,

ஒன்று மதனை யுணரேன் நான், – அன்று

தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்.

விளக்க உரை

(2084)

பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,

நீரளவும் செல்ல நிமிர்ந்ததே – சூருருவில்

பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்,

நீயளவு கண்ட நெறி.

விளக்க உரை

(2085)

நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து

பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, – அறிவானாம்

ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,

ஆலமமர் கண்டத் தரன்.

விளக்க உரை

(2086)

அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,

உரைநூல் மறையுறையும் கோயில், – வரைநீர்

கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,

உருவமெரி கார்மேனி ஒன்று.

விளக்க உரை

(2087)

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,

இன்று மறப்பனோ ஏழைகாள் – அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்

திருவரங்க மேயான் திசை.

விளக்க உரை

(2088)

திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்

திசையுங்க் கருமங்க ளெல்லாம் – அசைவில்சீர்க்

கண்ணன் நெடுமால் கடல்கடைந்த,

காரோத வண்ணன் படைத்த மயக்கு.

விளக்க உரை

(2089)

மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்

தியங்கும் எறிகதிரோன் றன்னை, – முயங்கமருள்

தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,

போராழிக் கையால் பொருது?

விளக்க உரை

(2090)

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்

ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, – விரிதோட்ட

சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,

மாவடிவின் நீயளந்த மண்?

விளக்க உரை

(2091)

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், – எண்ணில்

அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்

வுலகளவு முண்டோவுன் வாய்?

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top