(658)

(658)

தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்

வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்

ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்

ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே

பதவுரை

தேட்டரும்

(தன் முயற்சியால்) தேடிப்பெறுதற்கு அருமையானவனும்
திறல்

(தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும்
தேனினை

தேன் போல் பரமபோக்யனும்
தேன் அரங்கனை

தென் திருவரங்கத்தில் வாழ்பவனும்
திரு மாது வாழ்வாட்டம் இல் வனமாலை மார்பனை

பெரிய பிராட்டியார் நித்யவாஸம் செய்தற்கிடமாய் வாடாமல் செவ்வி பெற்றிருக்கிற வன மாலையை அணிந்துள்ள திருமார்வை யுடையனுமான ஸ்ரீரங்கநாதனை
மால்கொள் சிந்தையர்  ஆய்

(அவன் திறத்தில்) மோஹங்கொண்ட

மனதையுடையராய்

ஆட்டம் மேவி

(அந்த மோஹத்தாலே நின்றவிடத்தில் நிற்கமாட்டாமல்)

ஆடுவதிலே ஒருப்பட்டு

அலந்து அழைத்து

(பகவந்நாமங்களை) வாய்விட்டுக் கதறி கூப்பிட்டு
அயர்வு எய்தும்

இளைப்படைகின்ற
மெய் அடியார்கள் தம்

உண்மையான அன்புடைய பாகவதர்களின்
ஈட்டம்

கோஷ்டியை
கண்டிட கூடும ஏல்

ஸேவிக்கப் பெறுவோ மாகில்
அது காணும் கண் பயன் ஆவது –

கண் படைத்ததற்குப் பயன் அதுவேயன்றோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-   பூணாமார்பனைப் புள்ளுரும் பொன்மலையைக் காணாதரா; கண்ணென்றுங் கண்ணல்ல கண்டோமே” என்று  ‘எம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கு ப்ரயோஜநம்’ என்கிற ஸித்தாந்தம ஸாமாந்யமானதென்றும்  ‘பாகவதர்களுடைய கோஷ்டியை ஸேவித்தாலன்றிக் கண்களுக்கு ஸாபல்யம் கிடையா’ தென்பதே விசேஷஸித்தாந்தமென்றும் ஸாரமாகக் கண்டறிந்தவர்களுள் இவ்வாழ்வார் தலைவர் என்னுமிடம் இப்பாட்டில் விளங்கும்.  அடியவர்கட்குப் பரமயோக்யனான சரிய:பதியை வாயாரத்துதித்து அவனிடத்திலே மிக்க மோஹங்கொண்டு அதனால் உடம்பு நின்றவிடத்தில் நில்லாது கூத்தாடி,  ‘ச்ரிய:பதியே! -மந்நாராயணனே!’ என்றிப்படி பல திருநாமங்களைக்கூறி யழைத்து, அவ்வளவில் எம்பெருமான் கண்ணெதிரே வந்து ளேவைதந்தருளக் காணாமையாலே வருந்தி ஏங்குகின்ற பாரமார்த்திக பாகவதர்களின் கோஷ்டியை ஸேவிக்கப்பெறுவதே கண்களுக்கு ப்ரயோஜநமாமென்கிறார்.

மேவி = மேவுதல்-விரும்புதல்: “நம்பும் மேவும் நசையாகும்மே.” “கண்டிடக் கூடு மேல்” என்றது-இத்தகைய மெய்யடியார்களை இந்நிலவுலகத்தில் காணப்பெறுவதின் அருமையை விளக்கும்.

English Translation

The Lord is difficult to attain; he is the strength of the devotees, and sweet as honey; his chest, a fit place for the goddess Lakshmi, is adorned by an unfading flower garland. He is adored by devotees in his Arangam temple; they sing and dance, despair and call “Ranga” till they are fatigued. If mine eyes could only see those bands of true devotees, would they not have served their purpose?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top