(2155)
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான், – கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.
பதவுரை
|
ஏற்றான் |
– |
ரிஷபத்தை வாஹனமாகவுடையவனும் |
|
எயில் எரித்தான் |
– |
த்ரிபுரஸம்ஹாரம் பண்ணினவனும் |
|
நீற்றான் |
– |
சாம்பலைப் பூசிகொண்டிருப்பவனும் |
|
கூறு ஒருபால் மங்கையான் |
– |
தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும் |
|
வார் சடையான் |
– |
நீண்ட ஜடையைத்தரித்துள்ளவனும். |
|
கங்கையான் |
– |
(அச்சடைமுடியில்) கங்கையைத் தாங்கிக்கொண்டிருப்பவனுமான ருத்ரன். |
|
புள் ஊர்ந்தான் |
– |
கருடனை வாஹநமாகவுடையவனும் |
|
மார்வு இடந்தான் |
– |
இரணியனது மார்வைப்பிளந்தொழித்தவனும் |
|
நிழல் மணி வண்ணத்தான் |
– |
நீலரத்நம்போலே குளிர்ந்தவடிவையுடையவனும் |
|
பூ மகளான் |
– |
பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாகவுடையவனும் |
|
நீள் முடியான் |
– |
நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும் |
|
நீள் கழலான் |
– |
நீண்ட திருவடிகளையுடையவனுமான சர்வேச்வரனுடைய |
|
காப்பு |
– |
ரக்ஷணத்தில் அடங்கினவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் ஸ்ரீமந்நாராயண னென்றார் கீழ்ப்பாட்டில்: ருத்ரனை அப்படிப்பட்டவனாகச் சிலர் சொல்லுகின்றார்களே! அஃது என்ன? என்று கேள்வி பிறக்க, ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி, சிவனும் எம்பெருமானுடைய ஆளுகையிலே அடங்கினவனே யென்றார்.
ஏற்றானாயும் எயிலெரித்தானாயும் நீற்றனாயும் கூற்றொருபால் மங்கையானாயும் வார்சடையானாயும் கங்கையானாயு மிருக்கிறரு ருத்ரன் – புள்ளூர்ந்தானாயும் பார்விடந்தானாயும் நிழல்மணி வண்ணத்தானாயும் பூமகளானாயும் நீண்முடியானாயும் நீள்கழலானாயு மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அந்வயிப்பது. காப்பு- ரக்ஷ்யவர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி.
சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம்பெருமானுடைய, விசேஷணங்களை வரிசையாக இட்டு, இன்னான் இன்னானுடைய காப்பு- என்று அடைவுபடச் சொல்லலாமாயிருக்க , அப்படிச் சொல்லாமல் விஷ்ணு ருத்ரர்களை மாறிமாறித் தொடுத்திருப்பது இருவர்க்குமுள்ள வாசி உடனுக்குடனே தெரியவேணுமென்பதற்காக. தமோகுணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயு முள்ள ரிஷபத்தை வாஹநமாக வுடையவன் அவன்; வேதஸ்வரூபியான பெரிய திருவடியை வாஹநமாகவுடையவன் இவன்; தன்னை ஆச்ரயித்தவர்களின் குடியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெரித்தவன் அவன்; ஆச்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனிவன்; தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீறுபூசின ஸர்வாங்கத்தையு முடையான் அவன்; ச்ரமஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன் இவன். தன் உடலின் பாதி பாகத்தை ஸ்த்ரீரூபமாக ஆக்கிக்கொண்டவன் அவன்; உலகுக்கெல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாகவுடையவன் இவன்; தன் குறையைத் தீர்த்துக்கொள்ளும் வண்ணம் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லர்க்குந் தெரியும்படி சடை புனைந்தவன் அவன்; ஸர்வேச்வரத்வ ஸூசகமான திருவபிஷேகத்தையுடையவன் இவன்; தான் பரிசுத்தனாவதற்குக் கங்கையைத்தரிப்பவன் அவன்; அந்தக் கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன் – என்று சொல்லுமழகு காண்மின்.
எயில் – மதிள்; த்ரிபுரத்துக்கு இலக்கணை.
English Translation
The Lord, -whose mount is the Garuda bird, who tore Hiranya’s chest, who has a dark gem-hue, who keeps the lotus dame on his chest, who wears a tall crown, and who raised his foot high that Brahma washed, -protects Siva, who rides the bull, destroyed the three cities, wears ash, is woman-by-half, wears mat-hair, and took the Ganga waters on his head.
