(2146)
வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார், – நினைதற்
கரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்.
பதவுரை
|
நினைதற்கு அரியானை |
– |
(ஸ்வப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும் |
|
சேயானை |
– |
(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும் |
|
ஆயிரம் பேர் |
– |
ஆயிரம் திருநாமங்களையுடையவனும் |
|
செம் கண் கரியானை |
– |
சிவந்த திருக்கண்களையும் கறுத்த வடிவையுமுடையனுமான பெருமானைக் குறித்து |
|
கை தொழுதக்கால் |
– |
அஞ்சலி பண்ணினால் |
|
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்) |
||
|
வினையால் |
– |
நல்வினை தீவினைகளால் |
|
அடர்ப்படார் |
– |
நெருக்குபடமாட்டார்கள்; |
|
வெம் நரகில் |
– |
கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில் |
|
சேரார் |
– |
(மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்; |
|
தினையேனும் |
– |
சிறிதளவும் |
|
தீ கதிக்கண் |
– |
கெட்டவழிகளில் |
|
செல்லார் |
– |
போகமாட்டார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச்செய்தார். இப்படிப்பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க; இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாகக்குடியதே ; எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறார் இப்பாட்டில்.
வினையால் அடர்ப்படார்= ‘வினை’ என்னும் பொதுச்சொல்லானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்; உபநிஷத்தில் [முமுக்ஷு மோக்ஷத்துக்குப் போம் போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக் கல்மஷமற்றவனாய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றான்] என்று ஓதிவைத்திருக்கையாலே மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூறோ அப்படி புண்யமும் இடையூறென்பது நூற்கொள்கை. பாபம் நரகத்திலே கொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டு தள்ளும்; ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும் புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு. இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு- இங்கே யநுபவிக்க நேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள் என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.
வெம் நரகில் சேரார்=[ எம்பெருமானோடு கூடியிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம் ] என்று ஸ்ரீராமயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகாநுபவம் பண்ணமாட்டார்களென்கை.
English Translation
Karmas will not accrue on them, hell will not be their destiny, not the slightest pain will attend on them, -who worship with folded hands, the dark-hued lotus-eyed Lord afar. The Lord beyond the comprehension of the world.
