(2111)
தெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை, – எளிதாகத்
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,
போய்நாடிக் கொள்ளும் புரிந்து.
பதவுரை
|
உள்ளத்தை |
– |
மனத்தை |
|
தெளிது ஆக |
– |
[ஐம்புலன்களில் மேய்வதனாலுண்டான கலக்கம் நீங்கித்] தெளிவையுடைய தாம்படி |
|
செம் நிறீஇ |
– |
செவ்வனே நிறுத்தி [எம்பெருமானிடத்தில் மனத்தைமூட்டி] |
|
ஞானம் |
– |
பகவத்விஷய பக்தியாலே |
|
தெளிது ஆக |
– |
‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி |
|
நன்கு |
– |
நன்றாக |
|
உணர்வார் |
– |
அறிபவர்களுடைய |
|
சிந்தை |
– |
மனமானது. |
|
எளிது ஆக- |
– |
வருத்தமில்லாமல் |
|
தாய்நாடு கன்றேபோல் |
– |
[பெரிய பசுக்கூட்டத்தினிடையே] ‘தன் தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல, |
|
தண் துழாயான் அடிக்கே |
– |
குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே |
|
புரிந்து |
– |
விரும்பி |
|
போய் நாடிக்கொள்ளும் |
– |
தானே சென்று தேடிச்சேரும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சுபோலே எங்களுடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்க; அவர்கட்கு உத்தரமாக அருளிச்செய்வது போலும் இப்பாட்டு. பட்டிமேயவொண்ணாதபடி மனத்தையடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது மற்றெவரையும் பற்றாமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே பதறிக்கொண்டு மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்; ஒரு கன்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக்கொள்வது எப்படியோ அப்படியே இதுவும் . இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியே காரணம். ஸம்பந்தஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸுலபம் என்றாராயிற்று.
மூன்றாமடியில் “ அடிக்கே” என்றும் “அடியே” என்றும் பாடபேதங்கள் …
English Translation
Clearing their hearts of dross, clear-thinking seers of steadfast devotion, easily attain the feet of the Tulasi-garland Lord, like the calf finding the mother-cow through love.
